சனி, 8 ஜனவரி, 2011

திமிர்

பயிற்ச்சி காலத்திலேயே
தீ பருகி
தீர்ந்துவிட்டதென்று
தாகம் தெரிவித்தவன் - இன்று

பட்டம் வாங்கியபின்
போற்த்தி படுத்தால்
பற்றிஎரியும்
கூரை தீ என்ன
பாவமென்றா விட்டுச்செல்லும்

விட்டம் வெறித்து
வெருமனே இருக்க
வீனனில்லை - இவன்
வீரன்

வீரம் என்பது
நினைவுகள் கூறி
நிமிர்ந்து இருப்பதல்ல
நிகழும் நொடியில்
ஜெயித்து நிர்ப்பது.

நிச்சயம் வெல்வேன்.

G.T.முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக