நீந்தி கடந்த
தூரம் பெரிதல்ல
மீனுக்கு
என்றாவது
கரைமீது விலுந்துவிட்டால்
தவ்வி குதித்து
தண்ணீருக்குள் வரவேண்டும்
அதுதான் அரிது
உயிர் பயம்
உள்ளூக்குள் இருந்து - ஒரு
உந்துதல் தரும்
உனக்கே தெரியாது
நீ
இத்தனை உயரம்
துள்ளி குதிப்பாய் என்று
ஆடிய ஆட்டமும்
பாடிய பாட்டும்
அத்துனை மகிழ்ச்சியும்
அடியோடு மறந்துபபோகும்
உச்சந்தலையில் - ஓர்
அடி விழுந்தால்
மகிழ்ச்சியை
தாங்கி நிற்கவோ - இல்லை
மரண வலி
தவிர்த்து நிற்கவோ
நிச்சயம்
நீதான் செய்யவேண்டும்
நிமிர்ந்து நிற்பதையும் - என்றும்
உயர்ந்தே நிற்பதையும்.
G.T.முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக