சனி, 8 ஜனவரி, 2011

நீதான் செய்யவேண்டும்

நீந்தி கடந்த
தூரம் பெரிதல்ல
மீனுக்கு

என்றாவது
கரைமீது விலுந்துவிட்டால்
தவ்வி குதித்து
தண்ணீருக்குள் வரவேண்டும்
அதுதான் அரிது

உயிர் பயம்
உள்ளூக்குள் இருந்து - ஒரு
உந்துதல் தரும்
உனக்கே தெரியாது

நீ
இத்தனை உயரம்
துள்ளி குதிப்பாய் என்று

ஆடிய ஆட்டமும்
பாடிய பாட்டும்
அத்துனை மகிழ்ச்சியும்

அடியோடு மறந்துபபோகும்
உச்சந்தலையில் - ஓர்
அடி விழுந்தால்

மகிழ்ச்சியை
தாங்கி நிற்கவோ - இல்லை
மரண வலி
தவிர்த்து நிற்கவோ

நிச்சயம்
நீதான் செய்யவேண்டும்

நிமிர்ந்து நிற்பதையும் - என்றும்
உயர்ந்தே நிற்பதையும்.

G.T.முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக