புதன், 12 ஜனவரி, 2011

உள்தாழ்ப்பாள்

மூக்குத்தி திருகாணி
மூச்சுக்காற்றாவது
உரசிச்செல்லும்
வேர்க்காமல்

உனக்கு
சன்னல் காற்றாவது
வருகிறதா
சுவாசிக்க

உன் வீட்டின்
உள்தாழ்ப்பாள்
வெளியில்
நான்

அத்துமீறினால்
உலகம்
ஏசும்

அது கிடக்கட்டும்

உனக்கும்
என் நினைவு
வருமா ????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக