சிறப்பு கட்டண
பாகுபாட்டில்
சீக்கிரம்
சாமிதரிசனம்
மாத சம்பள
அர்ச்சகரை
மகிழ்விக்க
தட்சணைகள்
கனமாய் கவனித்த
பக்தருக்கு
பூ பழம் புன்னகை
கௌரவப்பிரசாதம்
வாசலில் யானை
அர்ச்சகர்
கற்பூரம் காட்டி - அது
கருப்பு
கரம் நீட்டி
வெளியில்தான் விந்தயே..
தகுதிகள்
நிறைந்த
தரித்திரக்காரர்கள்
பிச்சை போட
அச்சப்படுகிறான் பக்தன் ?
வாங்கிய வரம்
தானத்தோடே
தானும் போய்விடுமாம்
யாராவது
ஒன்றைமட்டும்
விளக்குங்கள் - இங்கு
நான்
சிரிக்கவா
அழுதிடவா.....
கண்ணாடியை பார்த்து இதற்காக அழுதிடுங்கள்,.. உங்களுக்கே சிரிப்பு வந்துவிடும்,.. Please remove word verification
பதிலளிநீக்கு