வியாழன், 24 பிப்ரவரி, 2011

சிரிக்கவா அழுதிடவா....

சிறப்பு கட்டண
பாகுபாட்டில்
சீக்கிரம்
சாமிதரிசனம்

மாத சம்பள
அர்ச்சகரை
மகிழ்விக்க
தட்சணைகள்

கனமாய் கவனித்த
பக்தருக்கு
பூ பழம் புன்னகை
கௌரவப்பிரசாதம்

வாசலில் யானை

அர்ச்சகர்
கற்பூரம் காட்டி - அது
கருப்பு
கரம் நீட்டி

வெளியில்தான் விந்தயே..

தகுதிகள்
நிறைந்த
தரித்திரக்காரர்கள்

பிச்சை போட
அச்சப்படுகிறான் பக்தன் ?

வாங்கிய வரம்
தானத்தோடே
தானும் போய்விடுமாம்

யாராவது
ஒன்றைமட்டும்
விளக்குங்கள் - இங்கு

நான்
சிரிக்கவா
அழுதிடவா.....

1 கருத்து:

  1. கண்ணாடியை பார்த்து இதற்காக அழுதிடுங்கள்,.. உங்களுக்கே சிரிப்பு வந்துவிடும்,.. Please remove word verification

    பதிலளிநீக்கு