இதுவரை பூமியில் நடந்த அழகான மனிதர்களில் ரமணரும் ஒருவர்.
மகிரிஷி புற்று நோயால் இறக்கும் தருவாயில் இருந்தார்.
அந்த நேரத்திலும் மகிரிஷியின் முகம் புன்னகையால் நிறைந்து இருந்தது.
இதைப் பார்த்த மருத்துவர்கள்,பக்தர்களும் ஆச்சரியப்பட்டனர்.ஒரு மருத்துவர் எப்படி இந்த நேரத்திலும்,இத்தனை வலியிலும் புன்முறுவலுடன் இருக்கம் முடிகிறது என்று கேட்டார்.
அதற்கு ரமணரோ,
நான் ஒரு சாட்சி. நீ எப்படி இந்த உடம்பை பார்க்குகிறாயோ{என்னை},அதே போல நானும் என்னை பார்க்கிறேன்.என்ன வித்தியாசம் எனும் போது இந்த உடல் படும் பெருந்துன்பத்தை நீ வெளியில் இருந்து பார்க்கிறாய், நானோ உள்ளேயிருந்து பார்க்கிறேன்,அம்புட்டு தான் என்றார் .
ஆரம்ப கட்டத்தில் முதுகில் அந்த புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார் என்றால் எந்த அளவு தன்னுள் ஆழமாக சென்று உயிரின் மையத்தை அடைந்து இருப்பார்.{ நினைக்கவே ஒரு கணம் சிலிர்க்குது}
பண்டிதர்- பாமரர்- ஏழை- பணக்காரர்- குழந்தை- கிழவர் என்ற பேதமின்றி எல்லோரும் அவரைத் தரிசித்தார்கள். எல்லோரையும் ஒரே விதமான புன்னகையுடனேயே ரமணர் வரவேற்றார். எல்லா ஜீவராசிகளும் அவரோடு நெருக்கமாயிருந்தன. அணில்கள் அவர் சமிக்ஞைக்குக்{உணர்வுகளுக்க ு} கட்டுப்பட்டு அவர் மேனியின் மேல் ஓடி விளையாடின. குரங்குகள் அவர் கையால் பழங்களை வாங்கி உண்டன. அவற்றின் பிரச்சினைகளை ரமணர் பலமுறை தீர்த்து வைத்திருக்கிறார். மயில்கள் அவர் முன் ஆனந்தமாய் நடனமாடின.
20 ஆண்டுகளாய் ரமணரோடு வாழ்ந்த லக்ஷ்மி என்கிற ஆசிரமப் பசு தன்னை யார் துன்புறுத்தினாலும் தொழுவத்திலிருந்து அறுத்துக்கொண்டு ரமணரின் அறைக் கதவின் அருகில் புகார் சொல்லும் பாவத்துடன் வந்து நிற்பது அங்குள்ளோருக்கு அதியமான காட்சியாய் இருக்கும். ரமணாஸ்ரமத்தில் மான் - காகம்- நாய்-பசு{லக்ஷ்மி} ஆகிய நான்கின் சமாதிகளும் இருக்கின்றன.
மகிரிஷி புற்று நோயால் இறக்கும் தருவாயில் இருந்தார்.
அந்த நேரத்திலும் மகிரிஷியின் முகம் புன்னகையால் நிறைந்து இருந்தது.
இதைப் பார்த்த மருத்துவர்கள்,பக்தர்களும் ஆச்சரியப்பட்டனர்.ஒரு மருத்துவர் எப்படி இந்த நேரத்திலும்,இத்தனை வலியிலும் புன்முறுவலுடன் இருக்கம் முடிகிறது என்று கேட்டார்.
அதற்கு ரமணரோ,
நான் ஒரு சாட்சி. நீ எப்படி இந்த உடம்பை பார்க்குகிறாயோ{என்னை},அதே போல நானும் என்னை பார்க்கிறேன்.என்ன வித்தியாசம் எனும் போது இந்த உடல் படும் பெருந்துன்பத்தை நீ வெளியில் இருந்து பார்க்கிறாய், நானோ உள்ளேயிருந்து பார்க்கிறேன்,அம்புட்டு தான் என்றார் .
ஆரம்ப கட்டத்தில் முதுகில் அந்த புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார் என்றால் எந்த அளவு தன்னுள் ஆழமாக சென்று உயிரின் மையத்தை அடைந்து இருப்பார்.{ நினைக்கவே ஒரு கணம் சிலிர்க்குது}
பண்டிதர்- பாமரர்- ஏழை- பணக்காரர்- குழந்தை- கிழவர் என்ற பேதமின்றி எல்லோரும் அவரைத் தரிசித்தார்கள். எல்லோரையும் ஒரே விதமான புன்னகையுடனேயே ரமணர் வரவேற்றார். எல்லா ஜீவராசிகளும் அவரோடு நெருக்கமாயிருந்தன. அணில்கள் அவர் சமிக்ஞைக்குக்{உணர்வுகளுக்க
20 ஆண்டுகளாய் ரமணரோடு வாழ்ந்த லக்ஷ்மி என்கிற ஆசிரமப் பசு தன்னை யார் துன்புறுத்தினாலும் தொழுவத்திலிருந்து அறுத்துக்கொண்டு ரமணரின் அறைக் கதவின் அருகில் புகார் சொல்லும் பாவத்துடன் வந்து நிற்பது அங்குள்ளோருக்கு அதியமான காட்சியாய் இருக்கும். ரமணாஸ்ரமத்தில் மான் - காகம்- நாய்-பசு{லக்ஷ்மி} ஆகிய நான்கின் சமாதிகளும் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக