செவ்வாய், 22 மே, 2012

தமிழனாகப் பிறக்க வேண்டும்!






மனிதன் தவிர்க்க வேண்டிய பண்புகளாக, திருக்குறளில் கூறப்பட்டுள்ளவை:

பொறாமை
பிறர் பொருளை கவர நினைத்தல்
புறங்கூறுவது
பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதல்
தீய செயல்களைச் செய்தல்
ஊண் உண்ணுதல்
திருடுவது
கோபம் கொள்வது
துன்பம் செய்வது
உயிர்களைக் கொல்வது
ஆசை
மறதி
சோம்பேறித்தனம்
துன்பம் கண்டு கலங்குவது
கள்ளுண்பது
பிறர் மனைவியை விரும்புவது

இதன் காரணமாகத்தான் திருக்குறளை, ‘வாழ்வியல் நூல்’ என்று அழைக்கிறோம்.


நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார். 

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளு வரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக