அன்றைக்கும்
இன்றைக்கும்
என்றைக்கும் - அவள்
மட்டும் தான்
கற்புக்கரசி.............
காற்ச்சிலம்பை
உடைக்காத
நம் வீட்டு
கண்ணகிகள்...?
நாட்டிற்க்கோ,
வீட்டிற்க்கோ,
நற்பண்பிற்க்கோ,
மன்னனில்லை
கோவலன்
அடிமை
ஆடல் அழகிக்கு
அவன்
இருந்தாலென்ன,
தவறுதலாய்
இறந்தால்தான் என்ன ..?
இருந்தும்
எரிக்கிறாள்
ஊரையே !!
உரைக்கிறது
எல்லோர்க்கும்
கொலை
குற்றம் தான்
அதிலும்
கொற்றவன் குற்றமென்றால்
கொளுத்த வேண்டிய குற்றம்
படித்தோம்
படிப்போம்
எல்லோர்க்கும் எடுத்துரைப்போம்
இருந்தும்
தேர்தலில்....!??
வாய்ப்பிருந்தும்
விரைத்துப்போய்
வீணடிப்போம்.... அட
எரிக்க வேண்டாம்
எதிர்க்கவாவதுவேண்டாமா.......?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக