புதன், 23 மே, 2012

தேசிய கீதம்...


அடிமை இந்தியர் ரத்தங்களில் சூடும் சொரணையும் ஏற்படுத்திய சக்தி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய இந்தக் கவிதைக்கு உண்டு.

  

1911 டிசம்பர் 27-ம் தேதி இது, முதன்முதலாக இசைக்கப்பட்டது. கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. வங்க மொழியில் எழுதிய தாகூரே, இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். 

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தேசியகீதமாக இசைக்கப்பட்ட இந்தப் பாடலை, இந்தியாவின் தேசிய கீதமாகவும் நேருஜி ஏற்றுக் கொண்டார். தீவிரவாதிகளும் மிதவாதிகளும் சேர்ந்து இசைத்த கீதம் இது!
         உலகிலேயே இரு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய ஒரே கவிஞர், ரவீந்திரநாத் தாகூர். வங்கதேசத்தின் தேசிய கீதமான 'அமர் ஸோனார்' பாடலை இயற்றியவரும் தாகூர்தான்!
'கீதாஞ்சலி'க்காக 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தாகூர் தான், நோபல் பரிசை வென்ற முதல் ஆசியர். குருதேவ் என அன்புடன் அழைக்கப்படும் ரவீந்திரநாத் தாகூருக்கு  மே 7 பிறந்த நாள்!





(பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணங்கச் செய்தல் வேண்டும்.

- பாரதியார்)


புலமைக்குச் செய்வோம் புகழ் அஞ்சலி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக