புதன், 23 மே, 2012

நீ செய்தது எல்லாம்

உனக்கென்று மாளிகை இல்லை.,
பூனை படை இல்லை,
7 தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் எண்ணம் இல்லை,
ஊரெல்லாம் மனைவிகள் இல்லை,
தெருவுக்கு ஒன்று என்று பிள்ளைகள் இல்லை,
மகனை வெளிநாட்டிற்கு கூத்தடிக்க அனுப்பவில்லை ,
மகளை 100 கோடிக்கு திருமணம் என்ற பெயரில் ஆடம்பரமாக விற்கவில்லை,
மனைவி பெயரில் வர்த்தக நிறுவனம் இல்லை,
குடும்பப் பெயரில் தொலைக்காட்சி இல்லை,
பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கவில்லை. 

---------------------------நீ செய்தது எல்லாம்---------------------------

இனத்திற்காகவும மக்களுக்காகவும், உரிமைக்காகவும் உண்மையாக போராடியதும், எந்த சமரசத்திற்கும் இடம் இல்லாமல் , விடுதலைக்காக எதையும் இழக்க துணிந்த உண்மைத்தலைவன் நீ , இந்த உலகத்திற்கு விடுதலை போராட்டத்தின் உண்மை நெறியை உணர்த்திய ஒப்பற்ற போராளி நீ, பெயரில் மட்டும் எழுச்சியை வைத்துக்கொண்டு சிறுத்தைகள், சூரியன்கள் என்று பெயர்களை வைத்துக்கொண்டு அற்ப பணதிற்க்க்காகவும் புகழுக்காகவும் பதவிக்காகவும் வாழும் ஆடம்பர ஜென்மங்களுக்கு மத்தியில் ., அமைதியாக இயக்கத்தின் பெயருக்கேற்ப தன்னிகரில்லா வீரமும் அர்பணிப்பும் கொண்ட போராட்டங்களையும் , போராளிகளையும் உன்னை போலே உருவாக்கி, தீவிரவாதம் என்கிற தவறான பெயரையும் இந்த அறியாமை கொண்ட உலகத்திடம் வாங்கிக்கொண்டு .. சலனமில்லாமல் குடும்பத்தையும், உன்னுடன் இருந்த ஒப்பற்ற போராளிகளையும், நல்ல ஜீவன்களையும் இனத்திற்காக பலிகொடுத்துவிட்டு , இருக்கிறாயா ? இல்லையா? என்ற கேள்வியையும் எழவிட்டு... எங்கேயோ இருந்துகொண்டு எங்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் உன்னை இந்த தமிழினம் ஈன்றது இந்த இனத்திற்க்கல்லவா பெருமை!!.. உன்னை பற்றி இன்று கூட அறியாமல் பேசுபவர்களும் அறிய மறுப்பவர்களும் இந்த இனத்தின் அவல நிலைமை...
பாதையை தேடாதே, உருவாக்கு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக